சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.. ரத்த மாதிரிகள் சொல்வது என்ன? கூடவே பரவும் டெங்கு.. உஷார்!
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இந்த ப்ளூவால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இது எந்த வகையான ப்ளூ என்பதையும் கண்டறிய முடியவில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த அறிகுறிகள் 3 நாட்களுக்கு இருக்கின்றன.

காய்ச்சல்
எனவே காய்ச்சல் என வருவோருக்கு நாங்கள் அவர்களது ரத்த மாதிரி, சளி மாதிரியை எடுத்து மருத்துவ ஆய்வுக்குள்படுத்தியதில் இன்ப்ளூயன்ஸா ஏ, எச்1என்1 வைரஸ் இருப்பது மருத்துவ சோதனையில் தெரியவருகிறது. கொரோனா அறிகுறிகள் போல் இருப்பதால் கொரோனா சோதனையும் செய்கிறார்கள்.

கொரோனா
ஆனால் அந்த சோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என வருகிறது. அது போல் ப்ளூ நெகட்டிவ் என வருகிறது. மருத்துவமனைக்கு காய்ச்சலால் வரும் நபர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட பரிசோதனை செய்யப்படுகின்றன. வயதானவர்களாக இருந்தால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கும் நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

காய்ச்சல் பாதித்தோர்
இந்த காய்ச்சல் பாதித்தோர் விரைந்து குணமடைகிறார்கள். ஆனால் தீவிரம் ஏதும் இல்லை. என்ன ஒன்று தற்போது டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொதுவாக சீதோஷ்ணம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது இது போன்ற ப்ளூ காய்ச்சல்கள் வருவது இயற்கைதான் என்கிறார்கள்.

பீதி வேண்டாம்
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் இந்த காய்ச்சல் வந்துள்ளது. கோடைக்காலத்தில் நீரால் ஏற்படும் நோய்கள், உணவினால் ஏற்படும் நோய்கள் வரும். இந்த காய்ச்சலால் மக்கள் பீதியடைய வேண்டாம். காய்ச்சல் ஒரு நாளுக்கு மேல் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலோ அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். எனவே காய்ச்சல் ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்து கொள்வது பிறருக்கு காற்று மூலம் பரவாமல் தடுக்கப்படும். மேலும் இந்த ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் விருப்பப்பட்டால் செலுத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications