மாரடைப்பிலிருந்து பக்தர்களைக் காக்க 40 ஆயிரம் மதிப்புள்ள ஊசியை இலவசமாக வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்
சென்னை: மாரடைப்பு ஏற்படும் பக்தர்களை உடனடியாக காப்பாற்ற விலை உயர்ந்த ஊசியை இலவசமாக தர திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்கு வருவார்கள். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் புரட்டாசி மாதம் இன்னும் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரும். பலர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையில் நடந்தே தரிசனம் செய்ய வருவார்கள்.

தரிசனம் செய்யவரும் பக்தர்கள் பலருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. பலருக்கு முதலுதவி செய்யப்பட்டு காப்பாற்றப்படுவார்கள்.சிலர் மாரடைப்பால் மரணித்திருக்கிறார்கள். இதனால் மாரடைப்பிலிருந்து பக்தர்களை உடனடியாக காப்பாற்ற விலை உயா்ந்த டெனெக்டேஸ் பிளஸ் ஊசியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையின் கீழ் டெனெக்டேஸ் பிளஸ் என்ற ஊசி மருந்து தயாா் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல பக்தர்கள் பலன்பெறுவார்கள். திருமலையில் உள்ள ராம்பகீச்சா ஓய்வு இல்லத்தில் உள்ள முதலுதவி மையத்தில் வெள்ளிக்கிழமை செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி இந்த மருந்தை வெளியிட்டாா்.
அப்போல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் ஏற்கெனவே திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இதில் நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மலை ஏறி வரும் பக்தர்களுக்கு இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளால் மாரடைப்பு ஏற்பட்டால் இந்த ஊசி மூலம் உடனடி பாதுகாப்பு கிடைக்கும்.

தென் இந்தியாவில் ரூயா மருத்துவமனை மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. திருப்பதி சுற்றியுள்ள 13 இடங்களில் இந்த ஊசி போடப்படும்.
சந்தையில் இதன் விலை ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் மக்களின் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் பொருட்டு தேவஸ்தனம் இந்த ஊசியை மருத்துவமனையில் இலவசமாக செலுத்தும். மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகும். மாரடைப்பால் பெரும்பாலும் இந்த ஊசி பக்தர்களைக் காப்பாற்றும்.
ஐசிஎம்ஆா் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரூயா மருத்துவமனையின் நூறு கிலோமீட்டா் தொலைவில் உள்ள அரசு நல மருத்துவமனைகளை தோ்ந்தெடுத்து ஊசி போடப்படும். அதன் ஒரு பகுதியாக, சொந்த மாநிலம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்லும் வகையில் திருமலையில் உள்ள அஸ்வனி மருத்துவமனையை தோ்வு செய்திருப்பதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ம் உதல்வர் தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications