Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஸ் ஒலிம்பியாட்.."தம்பியை"பார்த்ததும் குஷியான வெளிநாட்டு வீரர்கள்! செல்ஃபி எடுக்க குவியும் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த செஸ் விளையாட்டு வீரர்கள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 'தம்பி' சிலையை பார்த்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.

 Foreign players who came to participate in the Chess Olympiad; Happy to take a selfie with Thambi

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறவுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டன.

Recommended Video

    Chess olympiadஐ முன்னிட்டு செஸ் ஆடிய பிரபலங்கள்! Rajini | MKStalin

    இதனையடுத்து இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் இந்தப் போட்டிகளை துவக்கிவைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 6வது நாளாக வீரர்கள் தொடர்ந்து சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கின்றனர். இன்று அதிகாலை முதல் மெக்சிகோ, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் வந்திறங்கினர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டது. அப்போது விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தம்பி சின்னத்தின் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+