அதிமுகவுக்கே “டைவ்” அடித்த மைத்ரேயன்.. மீண்டும் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி பெற்ற முன்னாள் எம்.பி மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் டாக்டர் மைத்ரேயன். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சமயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார்.
அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இதனால், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, அதிமுகவில் இருந்து மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பிலும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்து வந்த மைத்ரேயன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி முன்னிலையில், பாஜகவில் மீண்டும் இணைந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக மைத்ரேயன் நியமனம் செய்யப்பட்டார்.
ஆனாலும், பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி டாக்டர் மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

அதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து மைத்ரேயனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் என்று அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டன் சென்றுள்ள நிலையில், மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications