அசுர பலம் பெறும் ஏர்போர்ஸ்.. இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. கலக்கும் இஸ்ரோ!
இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.
சென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.
இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான பயன்பாடுகளுக்காக விண்ணில் சாட்டிலைட்டுகள் ஏவப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜிசாட் 7ஏ சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

எப்படி
ஜிஎஸ்எல்வி எஃப் 11 மூலம் இந்த சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இன்று மாலை 4.10 மணிக்கு இது விண்ணை நோக்கி பாயும்.

என்ன ராக்கெட்
இந்தியா கிரியோசனிக் எஞ்சின்களை தனியாக உருவாக்க தொடங்கியதில் இருந்து 1000 கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட சாட்டிலைட்டுகளை கூட எளிதாக விண்ணில் நிறுத்துகிறது. அதன்படி தற்போது கிரியோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 என்ற நான்காம் தலைமுறை ராக்கெட் மூலம்தான் ஜிசாட் 7ஏ சாட்டிலைட் விண்ணில் ஏவப்படுகிறது.

முக்கியமாக
இந்த ஜிசாட் 7ஏ சாட்டிலைட் 2250 கிலோ எடை கொண்டது. இது முழுக்க முழுக்க இந்திய ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும். இது கேயூ பேண்டில் அலைகளை அனுப்பும் என்று கூறுகிறார்கள். இதை இஸ்ரோ செல்லமாக ஆங்கிரி பேர்ட் என்று அழைக்கிறது. இது 8 வருடம் உழைக்க கூடியது.

என்ன காரணம்
இதற்கு ஆங்கிரி பேர்ட் என்று பெயர் வைக்க காரணம், இந்த சாட்டிலைட் மூலம் இந்தியாவின் ஏர்போர்ஸ் புதிய பலம் பெற போகிறது. விமான கண்காணிப்பு, ரேடார் தொழில்நுட்பம், விமானங்களை சரியாக கண்டுபிடித்து அலெர்ட் செய்வது, தானியங்கி விமானங்களை கண்காணிப்பது என்று பல விஷயங்களில் இந்திய விமான படைக்கு இது உதவும். இதன் காரணமாக இந்திய விமானப்படை புதிய அரசு பலம் பெறும். அதன் காரணமாகவே இதற்கு ஆங்கிரி பேர்ட் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications