Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மழை.. 4, 5 நாட்கள் மழை நீர் தேங்கும் இடங்களில் கூட நீர் தேங்கவில்லை! ககன்தீப்சிங் பேடி பளீச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில், மழை நீர் தேங்குவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இப்போது தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.. சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

எப்போதும் சென்னையில் சிறு மழை என்றாலே முக்கிய சாலைகளில் நீர் தேங்கிவிடும். ஆனால் வடிகால் பணிகள் காரணமாக இம்முறை மழை நீர் அந்தளவு தேங்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ககன்தீப் சிங் பேடி

ககன்தீப் சிங் பேடி

இது தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், "சுமார் 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மழை நீர் அகற்றும் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நீண்ட கால பிரச்சினைகள் ஓரளவுக்குச் சரியாகி உள்ளது.

அதிகாரிகள்

அதிகாரிகள்

தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலை, மாம்பலம், கொளத்தூர் பகுதிகளில் கனமழை பெய்த போதிலும், பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. மழைக் காலத்தில் சில சமயங்களில் இலை, தழைகள், குப்பைகளால் வடிகாலில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை நீர் தேங்க இதுவும் ஒரு காரணம். இதைக் கண்காணித்துச் சரி செய்ய 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளோம்.

 ஊழியர்கள்

ஊழியர்கள்

இரவு முதலே நாங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். முக்கிய சாலைகளில் எங்கும் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கி உள்ளது. அதைச் சரி செய்யும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தேவையென்றால் கூடுதல் மோட்டர்கள் மூலம் நீரை வெளியேற்றவும் தயாராக உள்ளோம். மேலும், காலை முதல் 20,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

 4,5 நாட்கள் தேங்கும் இடங்கள்

4,5 நாட்கள் தேங்கும் இடங்கள்

மழை நீர் எங்கும் பெரியளவில் தேங்கவில்லை. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு எல்லாம் மழை வந்தாலே சீதாம்மாள் காலணி பகுதிகளில் 10 நாட்கள் வரை மழை நீர் தேங்கும். ஆனால், நேற்று அதிக மழை பெய்தும் கூட அங்கு மழை தேங்கவில்லை.. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஜிஎன் செட்டி சாலை, ராகவாச்சாரி சாலைகளில் பொதுவாகவே மழை பெய்தால் 4, 5 நாட்கள் வரை நீர் தேங்கும். ஆனால், நேற்று 150 மிமீ மேல் மழை பெய்தும் கூட மழை நீர் தேங்கவில்லை.

தேங்கவில்லை

தேங்கவில்லை

கேகே நகர், ராஜமன்னார் சாலை பகுதிகளிலும் மழை நீர் தேங்கவில்லை. இரவு அதிதீவிர கனமழை பெய்த போதும் கூட நகரின் பல பகுதிகளில் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. நீர் விரைவாக வடிந்துவிட்டது. புளியந்தோப்பு பகுதியிலும் முக்கிய சாலைகளில் மழை நீர் இல்லை. சில கிளை தெருக்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அதுவும் மெல்ல வடிந்து வருகிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

நகரில் தாழ்வான பகுதிகளில் தான் மழை நீர் தேங்குகிறது. அங்கும் கூட நீரை உடனடியாக வெளியேற்ற நிரந்தரமாக மழை நீரை அகற்ற பம்ப் வசதி ஏற்படுத்தி உள்ளோம். அது மிகச் சிறப்பாகவே செயல்படுகிறது. மாநகராட்சி மூலம் வடிகால் பணிகள் செய்யப்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. இத்தனை மாதங்களாக நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளுக்குப் பலன் கிடைத்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+