புரட்டி எடுத்த கஜா புயல்.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 28 பேர் பலி!
கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

சென்னை: கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 28 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தை கஜா புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது.
கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது.

4 பேர் பலி
கஜா புயலால் பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர்.

மிக மோசம்
தஞ்சை அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து பெண் குழந்தை பலியாகியது. கடலூரில் சுவர் இடிந்து பெண் ஒருவர் பலியானார். இவரின் கணவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார்.

வேறு எங்கு
திருவண்ணாலையில் சிறுமி ஒருவர் சுவர் இடிந்து பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலியானார்., மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிவகங்கையில் கன மழைக்கு சுவர் இடிந்து விழுந்து முத்து முருகன் (65) என்பவர் பலியானார்.

அடுத்ததடுத்த பலி
மேலும் சிவகங்கையில் மரம் முறிந்து அரசு ஊழியர் முத்து முருகன் பலியாகி உள்ளார்.சிவகங்கையில் மரம் விழுந்து எலிசபெத் ராணி என்ற பெண் திருவாரூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகி உள்ளனர். பண்ருட்டி அருகே மரம் விழுந்து ரங்கநாதன் என்பவர் பலியாகி உள்ளார்.

எண்ணிக்கை உயர்வு
புதுக்கோட்டையில் வெவ்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இதில் 4 பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் சிறுமியாவார். தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பலியாகி உள்ளார். அதேபோல் கொடைக்கானலில் ஒருவர் பலியாகி உள்ளார். கஜா புயல் மோசமாக தாக்கி இருப்பதால், மீட்பு பணிகள் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications