விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்.. தமிழகத்தில் எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும்?
கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Recommended Video
சென்னை: கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.
இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். மிக மோசமான காற்று காரணமாக பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
[கஜா புயலுக்கு எதிராக அரண்.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் மீட்பு படை வீரர்கள்!]
எங்கு புயல் பாதிப்பு
இந்த கஜா புயல் மூன்று மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடலூர், இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் புயல் பாதிப்பை ஏற்படுத்தும், கடலூர் மாவட்டம் அதிக புயல் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.
மழை எங்கு பெய்யும்
இந்த கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும். விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னையில் எப்படி
சென்னையில் இந்த புயலில் தாக்கம் இருக்காது. மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்து இருக்கிறது. இன்று மாலைக்கு மேல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
2 நாள்
தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடந்த பின் எப்போதும் மழை அதிக அளவில் பெய்யும் என்பதால், நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.