கஜா புயலுக்கு எதிராக அரண்.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் மீட்பு படை வீரர்கள்!
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில்தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இந்த புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் இந்த புயல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நாளை மதியம் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
[கஜா புயலால் சென்னையில் காலை முதல் மழை]

மீட்பு படை வந்தது
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் படையினர் தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டனர். இரண்டு நாட்கள் முன்பு முதற்கட்டமாக 20 ஆயிரம் வீரர்கள் வந்தனர். நேற்று இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் வீரர்கள் வந்தனர்.

தயார் நிலையில்
புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற இவர்கள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகம் முழுக்க தேசிய மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. போதுமான மீட்பு உபகரணங்கள், கருவிகள், படகுகள், உணவுப் பொருட்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

கடலோர படை
அதேபோல் கடலோர காவல் படையும் தயார் நிலையில் இருக்கிறது. கடலூர், நாகை, பாம்பன் ஆகிய கடலோர மாவட்டங்கள்தான் இந்த புயல் காரணமாக பாதிப்பை சந்திக்க உள்ளது. இதனால் மீட்பு பணிகளை செய்ய வசதியாக கடலோர காவல்படை களமிறங்கி உள்ளது.

மக்களுக்கு அறிவுறுத்தல்
மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications