விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 2020: கொரோனாவை வதம் செய்யும் விநாயகர்... டாக்டர் விநாயகர்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவை வதம் செய்யும் விநாயகர், டாக்டர் விநாயகர் சிலைகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
சென்னை: பண்டிகைக் காலங்களில் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அதற்கேற்ப சிலைகள் டிரெண்டிங் ஆக செய்து அசத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் டாக்டர் விநாயகர், கொரோனாவை வதம் செய்யும் விநாயகர் என சிலைகளை செய்து அசத்தி வருகின்றனர் சிலை வடிவமைப்பாளர்கள்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. யானை தலையும் மனித உருவமும் கொண்ட விநாயகர் முழுமுதற்கடவுளாக வணங்கப்படுகிறார். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து பத்து நாட்கள் வழிபடுவார்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை லாக்டவுன் அமலில் உள்ளது. பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளது என்றாலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன.
பக்தர்களை கவரும் வகையில் ராணுவ விநாயகர், பாகுபலி விநாயகர் என ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான சிலைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் கொரோனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக கொரோனாவை மையப்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
திருப்பூரில் கொரோனா வைரஸை விநாயகர் காலில் வைத்து மிதித்திருப்பது போன்ற சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதே போல விநாயகர் டாக்டர் உடுப்பு போட்டு நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அவரது வாகனமாக எலி உதவியாளராக இருந்து மருந்து பொருட்களை தாங்கி நிற்கிறது.
இந்த டாக்டர் விநாயகர் எலி நர்ஸ் செட் பக்தர்களிடையேயும் குழந்தைகளிடையேயும் தனி வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த சிலைகளுக்கு மார்க்கெட்டில் தேவை அதிகரித்துள்ளது அதிக ஆர்டர்களும் கிடைத்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications