விநாயகர் சதுர்த்தி.. காலையில் சிலைகளை வைத்து, மாலையில் கரைக்க அனுமதிக்க வேண்டும்.. இந்து முன்னணி
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடப்படும், காலையில் சிலைகளை வைத்து, மாலையே அதை கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழி பட கூடாது, சிலைகளை கூட்டமாக சென்று கரைக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு வீடுகளில் மட்டுமே சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

என்ன அறிக்கை
இந்த நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளுக்கு இந்து முன்னணி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

கூட்டம் இல்லை
கூட்டங்கள், ஊர்வலங்கள் இல்லாமல் இதை நடத்த முன்பே முடிவு செய்து இருந்தோம். தொடக்கத்திலேயே நாங்கள் இதை முடிவு செய்துவிட்டோம் . காலையில் சிலைகளை வைத்து, மாலையே அதை கரைக்க அனுமதிக்க வேண்டும். கூட்டம் சேராமல் கொண்டாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

அரசு ஒத்துழைப்பு
அமைதியான முறையில் விழாவை நடத்த திட்டமிட்டு உள்ளோம். தனி தனியாக வீடுகளில், தனியார் இடங்களில் கொண்டாட அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் விழாவை கொண்டாடும் திட்டம் இல்லை. அரசும் அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பெரிய இயக்கம்
கொரோனா காலத்தில் எங்கள் அமைப்பு மக்களுக்கு வீடு வீடாக சென்று உதவிகளை செய்துள்ளது.பல கோடி பேரை உறுப்பினராக கொண்ட பேரியக்கம் எங்களுடையது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகையை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications