Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் இந்த பொருளும் இனி ஈஸியா பெறலாம்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. மத்திய அரசு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு நம்பிக்கை தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. கோதுமையில் ஆங்காங்கே தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், அந்த குறையை அரசு போக்கியிருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு, ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

மத்திய அரசை பொறுத்தவரை, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக கடந்த ஆண்டு குறைத்திருந்தது. இதனால் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ - 2 கிலோ என, இருப்பை பொறுத்தும், முதலில் வருவோருக்கும் கோதுமை வழங்கப்பட்டது. பலர் கோதுமை கிடைக்காமல், ஏமாற்றமும் அடைந்தனர்.

ration tn ration card holders

கோதுமை தட்டுப்பாடு: எனவே "தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமையை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.. அத்துடன் தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று, மத்திய அமைச்சர்களையும் இதுசம்பந்தமாக சந்தித்து பேசினார்கள்..

அதுமட்டுமல்லாமல், தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய உணவு துறை அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி கொண்டேயிருந்தனர்.

பண்டிகை காலம்: இதையடுத்து, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்ததுடன், இந்த மாதமே வழங்கப்படும் என்றும் உறுதி தெரிவித்திருந்தது.. இதனால், பண்டிகை காலம் என்பதால், அரிசி அட்டைதாரர்களுக்கு கோதுமையை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே நம்பப்பட்டது.

இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோவும், மற்ற இடங்களில், 2 கிலோ வரையும் கோதுமை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

அமைச்சர் விளக்கம்: இதனிடையே, ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், புதிய விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+