பட்டென குறைந்த தங்கம் விலை.. இது எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?!
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் கிட்டத்தட்ட முழுமையார தணியும் என்ற நம்பிக்கை இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து மூலம் உருவாகியுள்ளது மூலம் உலக சந்தைகளில் முக்கியமான மாற்றங்கள் உருவாக துவங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வியாழக்கிழமை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த விலை, ஒரே நாளில் 1 சதவீதத்திற்கு மேல் குறைந்ததால் முதலீட்டாளர்களும் நகை வாங்க திட்டமிட்டவர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எம்சிஎக்ஸில் தங்கம், வெள்ளி விலை சரிவு
இன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் ஆகஸ்ட் மாத தங்க ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த விலை 10 கிராமுக்கு ரூ.1,573 குறைந்து ரூ.1,52,306 ஆக தொடங்கியது. முந்தைய வர்த்தக நாளில் இது ரூ.1,53,879 ஆக இருந்தது.
அதேபோல், ஜூலை மாத வெள்ளி ஃபியூச்சர்ஸ் விலை கிலோவுக்கு ரூ.3,807 சரிந்து ரூ.2,48,000 ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. முந்தைய வர்த்தக நாள் முடிவு விலை ரூ.2,51,807 ஆக இருந்தது.
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் தாக்கம் என்ன?
உலகளாவிய சந்தைகளில் கடந்த 5 நாட்களாக கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக குறைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் உருவாகியிருப்பதும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எண்ணெய் விநியோக அச்சத்தை குறைத்துள்ளன.
எண்ணெய் விலை குறையும்போது பணவீக்க அழுத்தமும் குறையக்கூடும். இதனால் பாதுகாப்பு முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை குறையும். இதுவே இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் வேறு படம்
சுவாரஸ்யமாக, இந்திய சந்தையில் விலை குறைந்தபோதும் சர்வதேச சந்தையில் தங்கம் மீண்டும் ஏற்றம் கண்டது. முந்தைய நாளில் 1.7 சதவீதம் சரிந்திருந்த ஸ்பாட் தங்க விலை, வியாழக்கிழமை 1.4 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 4,316.42 டாலராக உயர்ந்தது.
அதேபோல், நேற்றைய வர்த்தகத்தில் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்த வெள்ளி விலை, 2.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 69.51 டாலராக வர்த்தகமானது. இதற்கு காரணம் பெட் முடிவுகள்
பெடரல் ரிசர்வ் முடிவும் தாக்கம்
தங்க சந்தையின் நகர்வுக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித நிலைப்பாடு பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி தற்போது வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், பணவீக்கம் இன்னும் இலக்கு அளவான 2 சதவீதத்துக்கு மேல் நீடிப்பதால் இந்த ஆண்டிலேயே மீண்டும் வட்டி உயர்வு ஏற்படலாம் என்ற சிக்னலை கொடுத்துள்ளது.
மொத்தம் 19 கொள்கை நிர்ணய அதிகாரிகளில் 9 பேர் இந்த ஆண்டுக்குள் வட்டி விகித உயர்வு அவசியம் என கருதுகின்றனர். பொதுவாக வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கம் போன்ற வட்டி வருமானம் தராத சொத்துகளின் கவர்ச்சி குறையும்.
வட்டி உயர்த்துவதற்கான காலம் இன்னும் இருக்கும் காரணத்தால் அமெரிக்க சந்தையில் பணவீக்கத்தின் பாதிப்பு இருக்கும் என்பதால் நேற்று அமெரிக்கா - ஈரான் போர் ஒப்பந்தம் கையெழுத்து காரணமாக சரிந்த தங்கம் விலை, இன்று பெட் முடிவுகளுக்கு பின்பு உயர்ந்துள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் வட்டி விகிதம் உயரும் என்பதால் டாலர் மதிப்பும் குறையாமல் தக்கவைக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
தற்போதைய நிலையில் தங்க சந்தை இரண்டு முக்கிய காரணிகளுக்கு இடையில் சிக்கியுள்ளது. ஒருபுறம் அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் மற்றும் குறையும் எண்ணெய் விலை பணவீக்க அச்சத்தை குறைக்கிறது. மறுபுறம், அமெரிக்க வட்டி விகித உயர்வு சாத்தியம் மற்றும் உலக பொருளாதார நிச்சயமற்ற சூழல் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது.
இதனால் அடுத்த சில வாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் தொடரும் வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக குறுகிய கால முதலீட்டாளர்கள் உலக அரசியல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி அறிவிப்புகளை மூலம் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications