தங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 520 குறைந்த நிலையில் நேற்று முன்தினமும் சரிந்திருந்தது, இதன்படி தங்கம் விலை கடந்த இரண்டு நாளில் மட்டும் 864 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கொரோனா காட்டி போடப்பட்ட ஊரடங்கால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கொரோனாவிற்கு முன்பு தங்கம் விலை 32 ஆயிரம் என்கிற நிலையில் இருந்த நிலையில் திடீரென 40 ஆயிரத்தை தாண்டியது. 40 ஆயிரம் என்கிற நிலையில் தான் இருந்து வந்தது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நகை விலை ரூ.50 ஆயிரத்திற்கு செல்லுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது.

பலரும் முதலீடு
ஏனெனில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு, உலகம் முழுவதும் நிச்சயமற்ற பொருளாதார நிலை போன்ற காரணத்தால் தங்கம் விலை உயர்ந்தது. ஆபத்தான காலத்தில் தங்கத்தில் தான் பலரும் முதலீடு செய்கிறார்கள் என்பதால் தங்கம் விலை உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

தங்கம் விலை திடீரென சரிவு
ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு பிறகு பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக ஏற்ற இறக்க நிலை காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் 4,915க்கும், சவரன் 39,320க்கும் விற்கப்பட்டது.

சவரன் 864 ரூபாய் சரிவு
இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கிராமுக்கு 65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், சவரனுக்கு 520 குறைந்து ஒரு சவரன் 38,800க்கு விற்கப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும் சவரன் 864 அளவுக்கு குறைந்து உள்ளது.

தங்கம் விலை குறையும்
இந்த விலை குறைவு நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி முதல்முறையாக நகை வாங்குவோரை இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறினர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications