புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
சென்னை: கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் சொன்னபடி, புதிய வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்காமல் தாமதம் செய்தால், அவர்கள் மீது வாரன்ட் பிறப்பித்து, இழப்பீடு, அபராதத்தை வசூலிப்பதற்கு, புதிய வழிமுறையை, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
வீடு கட்ட ஆசைப்படும் பல நடுத்தர வர்க்கத்தினர், ஆசையுடன் கட்டுமான நிறுவனங்களை அணுகுகிறார்கள். ஆனால் சில கட்டுமான நிறுவனங்கள் சொன்னபடி கட்டிடங்களை கட்டியும் தருவது இல்லை.. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளை வழங்குவதும் இல்லை.. ஆனால் பணத்தை மட்டும் வீடு வழங்குவதற்காக கட்டுமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்தால், அது குறித்து பொது மக்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கும் வசதி இருக்கிறது. இந்த புகார்களை விசாரிக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறது.
ஆனால் இந்த உத்தரவை கட்டுமான நிறுவனங்கள் அலட்சியப்படுத்தும் நிலை இருப்பதாக புகார் உள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையிடும் நிலை இருக்கிறது. அதை விசாரிக்கும் ஆணையம், புகாருக்கு உள்ளானகட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதற்காக பல வழக்குகளில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதில் சில சமயங்களில் மாவட்ட நிர்வாகங்கள் சுனக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், உரிய காலத்தில் வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடும் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது..
இந்த விவகாரம் குறித்து அண்மையில் மத்திய வீட்டுவசதி அமைச்சகம் சார்பில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து 'அபராதம் அல்லது இழப்பீட்டை வசூலிக்கும் அதிகாரத்தை, மாவட்ட அளவிலான கூடுதல் மாஜிஸ்திரேட் அல்லது கூடுதல் கலெக்டர் ஆகியோருக்கு அளிக்கலாம் என்றும் இவர்களை வருவாய் மீட்பு அலுவலர்களாக செயல்பட அனுமதிக்கலாம்' என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த நடைமுறை இருக்கிறது. இதேபோன்ற நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டால், வீடு வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்,..
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications