ஒரு வருஷம் ஜெயில்தான்! அலிஷா குறித்து அவதூறு! திருச்சி சூர்யா சிவா, முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ்
சென்னை: பாஜக நிர்வாகியும், கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா சிவா மற்றும் யூடியூபர் முக்தார் அஹமது ஆகியோர் மீது சென்னை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக அரசியலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து வெளியிடப்படும் கருத்துகள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

அந்த வகையில் பிரபல கார் மற்றும் இருசக்கர ரேஸ் வீராங்கனையாக அறியப்படும் அலிசா அப்துல்லா, கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் கட்சியின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக பிரசவம் மற்றும் குடும்ப காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த அலிசா அப்துல்லா, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான சில காணொளிகள் காரணமாக கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
அலிஷா அப்துல்லா
குறிப்பாக தனது குடும்பம், கணவர் மற்றும் புதிதாக பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்து முக்தாரின் யூட்யூப் சேனலில் மிகவும் இழிவான மற்றும் அவதூறான கருத்துகள் பேசப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரில், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மூலம் தொடர்ந்து தன்மீதும், தனது குடும்பத்தினர்மீதும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகவும், குறிப்பாக பச்சிளம் குழந்தைகளை கூட இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அவதூறு வழக்கு
மேலும், பெண்களை குறிவைத்து தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் திருச்சி சூர்யா, முக்தார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். குடும்ப புகைப்படங்களை பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதனால் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் சமூக ஊடக புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணையை தொடங்கியது.
திருச்சி சூர்யா
சம்பந்தப்பட்ட யூடியூப் காணொளிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கின் முதல் கட்டமாக கடந்த ஜூன் 4-ம் தேதி அரசியல் விமர்சகரான திருச்சி சூர்யா சிவாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
முக்தார் அஹமது
இதற்கிடையே, வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான யூடியூபர் முக்தார் அஹமது தலைமறைவானார். அவரை தேடி சென்னை போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். செல்போன் சிக்னல்கள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் முக்தார் அஹமதுவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை போலீஸ்
பின்னர் நீதிமன்ற நடைமுறைகள் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் மற்றும் சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த வழக்கில் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்தது.
குண்டர் சட்டம்
அதன்படி, திருச்சி சூர்யா சிவா மற்றும் முக்தார் அஹமது ஆகியோரின் செயல்பாடுகள், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலித்த பிறகு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் எதிரான ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு நகல்கள் புழல் சிறை அதிகாரிகள் மூலம் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டன.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications