Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அரசே நினைத்தாலும் ஆக்கிரமிக்க முடியாது.. அதிரடி காட்டிய ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் எந்த விதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் ஈர நிலங்கள் ஆகும்.. அதாவது ஸ்பான்ச் போல் செயல்பட்டு எவ்வளவு தண்ணீர் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் உறிஞ்சு தனது நிலத்தில் சேகரிக்கும் தன்மை உடையவை. வெள்ளத்தில் இருந்து தென்சென்னையை பாதுகாக்கும் நிலம் ஆக உள்ளது. உலகின் மிக அபூர்வமான நன்னீர் சதுப்பு நிலமும் பள்ளிக்கரணையாகும்.

Government not to allow any kind of encroachment in Chennai Pallikaranai wetlands : High court

1965-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் ஒரு பகுதியான தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவு என்கிற அளவில் சுருங்கி இருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் வந்த பின்னர், ஒரு கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக களம் இறங்கி அதை காப்பாற்ற தொடங்கியது.. இப்போதைய நிலையில் புதிதாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்க அரசே நினைத்தாலும் முடியாது.. அந்த அளவிற்கு கறாராக உயர்நீதிமன்றம் இருக்கிறது. மேலும் பள்ளிக்கரணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலத்தை, சதுப்பு நிலம் என தமிழ்நாடு வருவாய் துறை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் நிலத்தை, தரமணியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு மே 16-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, அதை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர், "சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்கிறோம். இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய 8 ஏக்கர் சதுப்பு நிலத்தை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும். எதிர்காலத்தில் சதுப்பு நிலங்களில் எந்த வித மான ஆக்கிரமிப்புகளையும் அரசு அனுமதிக்க கூடாது" உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+