Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Population Census: தமிழகத்தில் ஜூலை 17 முதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு! அரசிதழில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஜூலை 17 ஆம் தேதி முதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது தொடங்கவுள்ளது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். வீடுகளில் யார் யார் வசிக்கிறார்கள், எத்தனை வாகனங்கள் உள்ளன, வீட்டில் உள்ள வசதிகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படும். அது போல் குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு குறித்த கேள்வியும் இடம் பெற்றுள்ளது. இது போல் 33 கேள்விகள் கேட்கப்படும்.

tamil nadu population

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வீடுகள், கட்டடங்கள், வீட்டில் உள்ள வசதிகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

அதன்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். அப்போது ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள், சின்னங்களை மத்திய அரசு டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தது.

முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக 4 டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தளங்களை மக்கள் 16 மொழிகளில் பயன்படுத்த முடியும்.

சுதந்திர இந்தியாவிலேயே முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது.

ஹவுஸ் லிஸ்ட்டிங் பிளாக் கிரியேட்டர், எச்எல்ஓஏ மொபைல் போன் செயலி, செல்ஃப் எனுமரேஷன் போர்ட்டல், சென்செஸ் மேனேஜ்மென்ட் அன்ட் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய 4 தளங்கள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அது போல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகளும் விரைந்து நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+