சம்பளம் மட்டுமல்ல விடுமுறை தினங்களும் உயருகிறது.. 8வது ஊதியக்குழு.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுப்புகளை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள், அவற்றில் Paid Leave எனப்படும் ஈட்டிய விடுப்பு, பாதி சம்பள விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு ஆகியவை அடங்கும்.
குறிப்பாக, அவர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் பாதி சம்பள விடுப்பு (இதை மருத்துவ விடுப்பாக மாற்றலாம்) மற்றும் 8 நாட்கள் தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். கூடுதலாக, தேசிய, மாநில மற்றும் அரசிதழில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ விடுமுறைகள் என்று 19 விடுமுறை நாட்கள் அளிக்கப்படும்

மேற்கண்ட விடுமுறை அமைப்பு 7வது ஊதியக்குழுவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில்தான் புதிய உயர்வு மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக்குழுவின் கீழ் paid leave 35 ஆக உயரும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் பாதி சம்பள விடுப்பு 25 நாட்களாக உயரும் என்று கூறப்பட்டு உள்ளது. தற்செயல் விடுப்பு 10 ஆக அதிகரிக்கும் என்கிறார்கள். பல தனியார் நிறுவனங்கள் இந்த கொள்கையை பின்பற்றுவதால் அதே முறையை மத்திய அரசு கொண்டு வரலாம் என்கிறார்கள்.
8வது ஊதியக் குழுவில் பல்வேறு ஊழியர்கள் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க போவதாக செய்திகள் வருகின்றன. அதாவது 18 அம்ச கோரிக்கைகளை பல ஊதிய குழுக்கள் சமீபத்தில் வைத்தன. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள போவதாக செய்திகள் வருகின்றன.
அதன்படி இந்த 8வது ஊதியக் குழு மூலம் பின்வரும் 5 முக்கியமான சம்பவங்கள் நடக்க உள்ளதாம்
1. ஊழியர்களின் சம்பளம் 180 - 210 சதவிகிதம் வரை உயரப்போகிறது
2. பென்சன் 100 சதவிகிதம் உயரப்போகிறது
3. அகவிலைப்படி பிட்மென்ட் காரணி 2.7 சதவிகிதத்திற்கு மேல் நிர்ணயிக்கப்படும்
4. அரசு ஊழியர்களின் விடுமுறை தினங்கள் அதன் சலுகைகள் மாற்றப்படலாம்
5. விடுப்பு காலத்திற்கான ஊதியத்தை கேஷ் செய்து கொள்ளும் விதிகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குழு நியமனம்
8வது ஊதியக் குழு நியமனங்கள் தொடங்கிவிட்டன. 8வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பதவியை நிரப்புவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது, இது அடுத்த மாத இறுதியில் இவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். சிலரின் நியமனம் தேர்வாகி முடிந்துவிட்டது. ஆனால் எல்லோரின் நியமனம் முடிந்த பின்பே அறிவிப்பு வெளியாகும்.
8வது ஊதியக்குழு காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயரும். எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் சம்பளம் உயரும் என்று இங்கே பார்க்கலாம்.
எவ்வளவு சம்பளம் உயரும்?
பியூன்கள், அட்டென்டர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் இந்த வகையின் கீழ் வருகிறார்கள். இவர்களின் அடிப்படை ஊதியம், முன்பு ரூ.18,000 ஆக இருந்தது.. இனி ரூ.51,480 ஆக மாற்றியமைக்கப்படும், இவர்களின் சம்பளம் ரூ.33,480 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ் லெவல் கிளர்க் இந்த பதவியின் கீழ் வருவார்கள். இவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.19,900ல் இருந்து ரூ.56,914 ஆக உயர்த்தப்படும். அதாவது இவர்களுக்கு ரூ.37,014 சம்பள உயர்வு ஏற்படும்.
காவல்துறை கான்ஸ்டபிள்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இவர்களுக்கு ரூ.21,700 ஆக இருந்த அடிப்படை ஊதியம் ரூ.62,062 ஆக உயர்த்தப்படும். அதாவது ரூ.40,362 சம்பளம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரேடு D ஸ்டெனோகிராபர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகள் இந்த வகைக்கு கீழ் வருவார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் முன்பு ரூ.25,500. இதில் ரூ.47,430 உயர்வு செய்யப்பட்டு ரூ.72,930 ஆக சம்பளம் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த கிளர்க்குகள் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள்.. இவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆக இருந்தது ரூ.83,512 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது ரூ.54,312 சம்பள உயர்வு ஏற்படும்.
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த நிலைக்கு கீழ் வருவார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.35,400ல் இருந்து ரூ.1,01,244 ஆக உயரும். அதாவது ₹65,844 சம்பள உயர்வு ஏற்படும்..
இந்த பிரிவில் கண்காணிப்பாளர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ₹44,900ல் இருந்து 83,514 ருபாய் அதிகரிக்கும். அதன்படி புதிய சம்பளம் ரூ.1,28,414 ஆக மாற்றியமைக்கப்படும்..
மூத்த பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி தணிக்கை அதிகாரிகள் இந்த பிரிவின் கீழ் உள்ளனர். இவர்களின் அடிப்படை ஊதியம் தற்போது ரூ.47,600ல் இருந்து ரூ.88,536 அதிகரித்து ரூ.1,36,136 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
அடுத்த நிலையில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்கு அலுவலர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ரூ.53,100.. விரைவில் ரூ.1,51,866 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.98,766 சம்பள உயர்வு அவர்களுக்கு கிடைக்கும்.
சிவில் சேவைகளில் நுழைவு நிலை அதிகாரிகள் உட்பட குரூப் ஏ அதிகாரிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். தற்போது ரூ.56,100 ஆக உள்ள அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,60,446 ஆக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications