செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த அமலாக்கத் துறைக்கு ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகர் அனுமதி கொடுத்துள்ளார். இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு 2016 ஆம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017, 2018 ஆகிய காலகட்டத்தில் 4 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்குகளை ஆதாரமாக வைத்து செந்தில் பாலாஜி சட்டவிரோத பணவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டை தொடர்ந்து அவரை இரவோடு இரவாக கைது செய்தது.
இதையடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த அவர் உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்த அமலாக்கத் துறை அரசிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குற்றச்சாட்டில் சிக்கியவர் பொது ஊழியர் என்றால் அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற்றாக வேண்டும்.
அதன்படி செந்தில் பாலாஜி வழக்கை தொடர்ந்து நடத்தக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. அவர் தற்போது திமுகவில் இருப்பதால் முந்தைய ஸ்டாலின் தலைமையிலான அரசு அதன் மீது முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது.
தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ளதால் அமலாக்கத் துறை கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அது தொடர்பாக பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. எனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications