ஆளுநர் ஆர்.என்.ரவி - டிஜிபி சைலேந்திர பாபு திடீர் மீட்டிங்.. பறந்த முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது வாகன கான்வாய் செல்லும்போது, பொதுமக்கள் யாருக்கும் பாதிக்கப்படக் கூடாது என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுவாக முதல்வர், ஆளுநர் போன்ற முக்கிய தலைவர்கள் வரும்போது, சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோல வாகனங்கள் நிறுத்தப்பட்டாலும் கூட, சில சமயங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

governor rn ravi asks sylendra babu to ensure people are not disturbed by his convoy

இதனால், சில சமயங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில்,தனது வாகன கான்வாய் செல்லும்போது, பொதுமக்கள் யாருக்கும் பாதிக்கப்படக் கூடாது என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைத் தினம் (நவ. 6) சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தனது வாகனப் பயணத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

governor rn ravi asks sylendra babu to ensure people are not disturbed by his convoy

மேலும், ஆளுநரின் வாகனம் செல்லும்போது பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் டிஜிபி-யிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்வரின் பாதுகாப்பு கான்வாய் 12 வாகனங்களில் இருந்து 6 வாகனங்களாகக் குறைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஆளுநரிடம் இருந்த இதுபோன்ற அறிவிப்பு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+