காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லையாம்.. நேதாஜிதான் தேச தந்தை! ஒரே போடாக போட்ட ஆளுநர் ரவி
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் பங்கேற்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் தரவில்லை” என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருக்கிறார். ஆளுநர் பங்கேற்பதால் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

மட்டுமல்லாது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இன்றைய வருகைப்பதிவு செய்யப்படும் என்றும் கூறி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக விளக்கமளித்த துணை வேந்தர், நிகழ்ச்சிக்கு எந்தெந்த மாணவர்கள் வந்தார்கள் என்பது குறித்து நாங்கள் எந்த பதிவும் செய்யவில்லை. எனவே பங்கேற்காத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படாது" என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் மற்றொரு சர்ச்சை வெடித்திருக்கிறது. அதாவது, காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் பேசிய அவர்,
இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை.
சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையின் கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆளுநர் பேசிய பல விஷயங்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரமும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications