Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் உரையையே ஒழிக்க.. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வருவோம்.. ஸ்டாலின் ஆக்ரோஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛முதலில் தமிழ்நாடு. அதன்பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த இந்த முறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர திமுக முயற்சிக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. 2

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்ற வந்தார். ஆனால் வழக்கம்போல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கீதத்துடன் கூட்டத்தொடரை தொடங்க வலியுறுத்தி வரும் நிலையில் அது ஏற்கப்படவில்லை.

governor-speech-dmk-wants-constitutional-amendment-in-the-very-next-parliamentary-session-to-abolis

இதனால் ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்த மறுத்து வெளியேறினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை முழுவதுமாக வாசித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.

அதேபோல் அன்றைய தினம் கேரளாவிலும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மத்திய அரசுக்கு எதிராக உள்ள வார்த்தைகளை படிக்காமல் விட்டார். மேலும் கூடுதலாக அவரே சில விஷயங்களை சேர்த்து படித்தார்.

அந்த வரிசையில் இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மாநில அரசின் உரையை வாசித்தார். அவர் வெறும் 3 வரிகளை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் ஆளுநர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது.

இந்நிலையில் தான் ஆளுநர்களின் இந்த செயல்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஆளுநர் உரையையே ஒழிக்க திமுக சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சி எடுக்கும் என்று சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‛‛முதலில் தமிழ்நாடு. அதன்பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. இந்த முறை தெளிவாகவும் திட்டமிட்டபடியும் உள்ளது. மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களை போல நடந்துகொண்டு, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பலவீனப்படுத்துகின்றனர்.

நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்போது ஒரே தீர்வு. இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கலந்தாலோசித்து. இந்த பொருத்தமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கும்'' என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+