ஆளுநர் உரையையே ஒழிக்க.. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வருவோம்.. ஸ்டாலின் ஆக்ரோஷம்
சென்னை: ‛‛முதலில் தமிழ்நாடு. அதன்பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த இந்த முறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர திமுக முயற்சிக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. 2
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்ற வந்தார். ஆனால் வழக்கம்போல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கீதத்துடன் கூட்டத்தொடரை தொடங்க வலியுறுத்தி வரும் நிலையில் அது ஏற்கப்படவில்லை.

இதனால் ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்த மறுத்து வெளியேறினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை முழுவதுமாக வாசித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
அதேபோல் அன்றைய தினம் கேரளாவிலும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மத்திய அரசுக்கு எதிராக உள்ள வார்த்தைகளை படிக்காமல் விட்டார். மேலும் கூடுதலாக அவரே சில விஷயங்களை சேர்த்து படித்தார்.
அந்த வரிசையில் இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மாநில அரசின் உரையை வாசித்தார். அவர் வெறும் 3 வரிகளை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் ஆளுநர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது.
இந்நிலையில் தான் ஆளுநர்களின் இந்த செயல்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஆளுநர் உரையையே ஒழிக்க திமுக சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சி எடுக்கும் என்று சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛முதலில் தமிழ்நாடு. அதன்பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. இந்த முறை தெளிவாகவும் திட்டமிட்டபடியும் உள்ளது. மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களை போல நடந்துகொண்டு, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பலவீனப்படுத்துகின்றனர்.
நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்போது ஒரே தீர்வு. இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கலந்தாலோசித்து. இந்த பொருத்தமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கும்'' என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
-
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!












Click it and Unblock the Notifications