ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை.. நாங்க செய்வதைத்தான் அரசியலாக்கிவிடுகிறார்கள்! தமிழிசை பேச்சு!
சென்னை: ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர்களின் நடவடிக்கைகள் தான் அரசியலாக்கப்படுகிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு மரியாதை செலுத்த தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி இரட்டைமலை சீனிவாசன் படத்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் மரியாதை செலுத்தினார்.

இரட்டைமலை சீனிவாசன்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். அம்பேத்கரோடு இணைந்து பட்டியலின மக்களுக்காக மாபெரும் புரட்சியை செய்தவர். தனித்துவிடப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி கிடைக்க முக்கியக் காரணம் இரட்டைமலை சீனிவாசன் தான். தமிழ் என்று பேசுபவர்கள் கூட தமிழில் கையெழுத்து போடாமல் இருக்கும் சூழலில், மகாத்மா காந்திக்கு தமிழில் கையெழுத்திட கற்றுக் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். முடிந்தவரை அனைவரும் தமிழில் கையெழுத்திட பழகிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

நடராஜர் கோவில் விவகாரம்
தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை. நடராஜருக்கு அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைத்தார்கள். அப்போது அங்கே வந்து ஒருவர் என்னை எழுந்து போக கூறினார். நான் இங்கே இருக்கிறேன் என்று கூறினேன். ஒருவர் அப்படி செய்தார் என்பதற்காக அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது. அவர் என்ன நோக்கத்திற்காக இடம் மாற கூறினார் என்பது தெரியாது. யாரையும் அவமரியாதை செய்வது சரியானதல்ல. எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள். கோவிலில் எனக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை
ஆளுநர்கள் சுறுசுறுப்பாக இருப்பதால் பரபரப்பாக இருக்கிறது. இந்தியாவில் அனைத்து ஆளுநர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறார்கள். ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை. ஆளுநரின் நடவடிக்கைகள் மற்றவர்கள் அரசியலாக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

காரைக்காலில் காலரா
காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கட்டுக்குள் இருக்கிறது. நிச்சயம் காலரா பரவுகிறது. இதனால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காலராவை கட்டுப்படுத்த நீர்நிலைகளை சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது. புதிய பைப்லைன்கள் போடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications