புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் இயக்குநர் கவுதமன்.. கட்சியின் பெயர், கொடி என்ன?
சென்னை: இயக்குநர் கவுதமன் புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.
தமிழ் திரைப்பட இயக்குநரான இவர் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவருக்கும் பரீட்சயமானார். அதைத் தொடர்ந்து தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.

காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க முன்னெடுக்கும் முயற்சிகள், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் என விவசாய நிலங்களை சுரண்டுவதற்காக போடப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடிய விவசாயிகளுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
நீட் தேர்வில் அனிதா மரணம், தூத்குக்குடி ஸ்டெர்லைட் ஆலை, துப்பாக்கிச் சூடு விவகாரம், காவிரி பிரச்சினை என பல்வேறு போராட்டங்களில் தன்னை முன்னிறுத்தியவர் கவுதமன்.
தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று அரசியல் கட்சியை தொடங்கினார்.
கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து பொங்கல் பண்டிகையில் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர் கவுதமன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications