முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் காட்சி! கேரளாவில் மீண்டும் சேட்டையை காட்டும் விஷமிகள்!
சென்னை: முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை விஷம எண்ணம் கொண்ட சிலர் கேரளாவில் மீண்டும் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
தமிழகமும் கேரளமும் நட்புறவுடன் திகழ்ந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணையை மையப்படுத்தி அரசியல் ஆடு புலி ஆட்டம் ஆட முயல்கிறார்கள் விஷம எண்ணம் கொண்ட சிலர்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளாவில் உள்ள விஷமிகள் சிலர் தொடர்ந்து கட்டுக்கதையை கட்டி வருகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ விஷமிகளின் பொய்கூச்சலை கருத்தில் ஏற்ற கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அனையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
வழக்கின் முடிவில் மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, முல்லைப் பெரியாறு அணையில் முதலில் 142 அடி வரை தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அதன் பின்னர் 145 அடி உயர்த்தலாம் என்றும், பின்னர் பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கொடுத்தது.
இதனை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. அணையின் வலிமையைச் சோதிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. அந்தக் குழு அணை வலுவாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியின் படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதலுடன் மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கண்காணித்து வருகிறது.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுகவும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியில் இருப்பதால் அதில் சிண்டுமுடிந்துவிடும் நோக்கில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்ற பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளதோடு மீண்டும் முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை பரப்பும் பணியை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications