Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் நகராட்சிகளாக மாறப்போகும் 10 பேரூராட்சிகள்.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதன்படி மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், அவிநாசி, கோத்தகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும், 30-ம் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்து அறிவிக்கப்படவுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், முறையே மாநகராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டால், மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களின் கீழ், சாலைகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், திடக்கழிவு மேலாண் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.

மாநகராட்சிகள்

மாநகராட்சிகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் தற்போது நகரமயமாகி வருகிறது. நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் உள்ளாட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் நிலை உயர்த்தப்படுகின்றன.

நகர வளர்ச்சி

நகர வளர்ச்சி

அப்படி அமைக்கப்படும் புதிய உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள்தொகை, நகர வளர்ச்சி, அதன் உட்கட்டமைப்பு வசதி களுக்கேற்ப, மாநிலங் களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கின்றன. கடந்த ஆண்டு பல நகராட்சிகள், மாநகராட்சிகளாகவும், 29 பேரூராட்சிகள், நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப் பட்டன.

அவிநாசி ஸ்ரீபெரும்புதூர்

அவிநாசி ஸ்ரீபெரும்புதூர்

இந்நிலையில் தமிழ்நாட்டின் 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அதன் விவரத்தை இப்போது பார்ப்போம். சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஈரோடு - பெருந்துறை, திருப்பூர் - அவிநாசி, உதகை- கோத்தகிரி, நெல்லை மாவட்டத்தில் வடக்கு வள்ளியூர், சங்கர் நகர், நாராணம்மாள்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், தென்காசி - ஆலங்குளம் என 10 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வொளியாகி உள்ளது.

எப்போது அறிவிப்பு

எப்போது அறிவிப்பு

இந்த 10 பேரூராட்சிகளையும் நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறு விவரங்களை நகராட்சி நிர்வாக ஆணையரகம், பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 30-ம் தேதி மானிய கோரிக்கையின்போது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரூராட்சிகள்

பேரூராட்சிகள்

இதனிடையே பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர்கள் இது பற்றி கூறும் போது, தரம் உயர்த்துவதால் பேரூராட்சி நிர்வாக துறை பாதிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய வளர்ந்த ஊராட்சிகளை, பேரூராட்சியாக மாற்றி அமைக்கலாம் என யோசனை தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+