மா.சுப்பிரமணியன் எங்க ஓடி முடிச்சாலும், இங்க ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.. உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
சென்னை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து நாடுகளிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடி விட்டாலும் அவரது சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என கிண்டலாகக் கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் 1.6 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கோதண்டராமன் கோவில் குளம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலிn, மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "திமுகவில் இளைஞர் அணி செயலாளராக நான் பதவியேற்ற பின் இளைஞர் அணியின் முதல் பணியாக தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். திமுக இளைஞரணி சார்பில் 1,000 குளங்களை சீர்செய்துள்ளோம். பொதுமக்கள் நீர் நிலைகளை பாதுக்காப்பதை இயக்கமாக முன்னெடுத்து அரசிற்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து நாடுகளிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடி விட்டாலும் அவரது சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்" என கிண்டலாகக் கூறினார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பரவலால் உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகளாக கடைபபிடிக்கப்பட்டு வந்த பொதுச் சுகாதார அவசரநிலை பிரகடனம் விலக்கி கொள்ளப்படுவதாக உலக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதனால் இனி அச்சம் அவசியம் இல்லை என்றாலும் கூட்டம் கூடும்போது முகக்கவசம் அணிவது தனிமனித பாதுகாப்பை கடைப்பிடித்தல் முக்கியமானது என்றார்.












Click it and Unblock the Notifications