காடுவெட்டி குரு மகன், மருமகன் மீதான தாக்குதல்- எச். ராஜா கண்டனம்- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகன் மற்றும் மருமகன் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது. அப்போது காடுவெட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் காடுவெட்டி குருவின் மகன், மருமகன் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், எனது அருமை நண்பர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கணல் அரசன, மற்றும் குரு அவர்களின் மருமகன்கள் மனோஜ், மதன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குற்றவாளிகள் மீது மாநில அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications