தமிழிசை சொன்னது பாயும் புலியை.. எச். ராஜா அதை சாப்பாட்டு புளியாக்கிட்டாரே.. ஏன் இந்த குழப்பம்??
முக ஸ்டாலினின் பேச்சுக்கு எச்.ராஜா ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார்
Recommended Video
சென்னை: புளி பழுப்பது சாம்பாருக்குத்தான் என்று எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டு தமிழிசை சவுந்தராஜனுக்கு ஆறுதலும், முக ஸ்டாலினுக்கு பதிலடியும் தந்துள்ளார்.
சமீப காலமாகவே திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சி கவிழ்ப்பு விரைவில் நடக்கும் என்று சொல்லி வருகிறார். நேற்றும்கூட விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தாமல் விட்டிருப்பது, புலி பதுங்குவது பாய்வதற்காக தான், ஓடி ஒளிவதற்காக இல்லை என்றும் ஸ்டாலின் சொன்னார்.
ஸ்டாலின் எந்த கருத்தை, எங்கிருந்து பேசினாலும், முதல் ஆளாக வந்துபதிலடி தருவது அநேகமாக தமிழிசையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நேற்றைய பேச்சுக்கும் கேகே நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மு.க.ஸ்டாலின் புலியா? இல்லை பூனையா? என்பதை நினைத்தால், கவலையாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
தமிழிசையின் கவலையை அறிந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார். அதில், "புளி பழுப்பது சாம்பாருக்குதான்" என்று ஒத்தை வரியை குறிப்பிட்டு தமிழிசைக்கு ஆறுதலும், முக ஸ்டாலினுக்கு பதிலடியும் தெரிவித்துள்ளார்.
புளி பழுப்பது சாம்பாருக்குதான் https://t.co/lUQYirOaoM
— H Raja (@HRajaBJP) June 30, 2019
எல்லாம் சரிதான்.. ஆனால் தமிழிசை குறிப்பிட்டுச் சொன்னது பாயும் புலியா இல்லை பதுங்கும் பூனையா என்றுதான். ஆனால் "லி"யை "ளி"யாக்கி.. புலியை புளியாக்கி .. சாம்பார் சட்டிப் பக்கம் போய் விட்டார் எச்.ராஜா.
கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டார் போல.!