Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுள் இல்லை என்பவர்கள் கையில் கோவில்.. அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வாங்க: எச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இல்லை என்று கூறும் திமுக கையில் கோவில்கள் உள்ளன என்று விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "இன்று நம் கோவில்கள் நம்மிடம் இல்லை, திமுக கட்டுப்பாட்டில் உள்ளன. கடவுள் இல்லை என கூறும் திமுக 40,000 இந்து கோவில்களை தன் கையில் வைத்துள்ளது. உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்கிறது. கோவில்களை முறையாக பராமரிப்பதில்லை. கோவிலை பராமரிப்பதற்கு உரிய சம்பளத்தை பூசாரிகளுக்கு கொடுப்பதில்லை.

H Raja Urges Hindus to Protest Against HRCE Slams DMK s Stand on God and Temples

திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துள்ளன. தமிழகத்தில், 9,500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்கிறது. திமுக அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, இந்துக்களின் காணிக்கை பணத்தில் நடத்தப்பட்டது. அதற்கு இதுவரை கணக்கு கொடுக்கவில்லை. கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வரவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் தலைவர் டி.ஆர்.ரமேஷ், கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. தணிக்கைக்காக கோவில்களின் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காதது ஏன்?

எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டியுள்ளது? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை? தணிக்கை செய்யப்படாததற்கான காரணம் என்ன என்பதை, அறநிலையத்துறை ஆணையர் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+