Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விற்பனை பத்திரம்.. ஒரே இடத்தில் 10 வருடம் வசிப்போருக்கு கிடைக்கிறதா விற்பனை பத்திரம்? வாவ், உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வீட்டுவசதி வாரியம் பொதுமக்களின் நன்மைக்காகவே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சோஷியல் மீடியாவில் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலம், ஏராளமான திட்டங்களில் குறிப்பாக, பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன..

Happy announcement about Sale Deed and sale deed to occupants for 10 years by Housing board action say sources

வீட்டு வசதி: எனவே, தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், பொது மக்களும் வீடு ஒதுக்கீடு பெறுகின்றனர். இப்படி ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் உடனே வழங்கப்பட்டுவிடும்.

ஒருவேளை, முழுத்தொகையை செலுத்தியிருந்தும், விற்பனை பத்திரத்தை பெறாதவர்கள் மற்றும் நிலுவைத்தொகை உள்ளவர்கள், விரைவாக விற்பனை பத்திரம் பெறும்வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல, நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள், உடனடியாக தொகையை செலுத்திவிட வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தியே வருகிறது.

தவணை பணம்: ஆனாலும், ஒருசில காரணங்களால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தவணை செலுத்த தவறிவிடுகிறார்கள்.. இப்படி தவணை தவறியவர்களுக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால் நிலுவை தொகையும் அதிகமாகி கொண்டேபோகிறது. எனவேதான், சமீபத்தில் சென்னைவாசிகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதன்படி, சென்னையில் அண்ணாநகர், கே.கே.நகர், பெசன்ட் நகர், ஜெஜெ நகர் பகுதிகளில், வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தினால், விற்பனை பத்திரம் உடனே வழங்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. நிலுவை தொகை செலுத்தியும், விற்பனை பத்திரங்களை பெற முடியாமல், அவதிப்படும் நிலையில், உடனடியாக பத்திரம் தருவதாக அறிவித்திருந்தது, ஒதுக்கீட்டாளர்களுக்கு பெருமகிழ்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

புது திட்டம்: இப்போது இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.. அதாவது, சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கான பகுதிகளில், முறையான ஒதுக்கீட்டு ஆணையின்றி, புதிதாக குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி 10 வருடங்களாக ஒரே இடத்தில் வசித்து வரும் குடும்பங்களும், தங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்களாம்.

இதையடுத்து இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளதாக தெகிறது.. எனவே, இவர்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, 10 வருடங்களாக ஒரே இடத்தில் வசித்த குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் பணிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் துவக்க போவதாக சொல்கிறார்கள்..

சபாஷ்: திரட்டப்படும் விவரங்களில், தகுதியுள்ள குடும்பங்களை ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட உள்ளதாம்.. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் கூறுகிறார்கள். அரசு தரப்பில் இது சம்பந்தமான எந்தவிதமான தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+