உஷார்.. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம்
அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.. இது படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த தாழ்வு மண்டலமானது, கடந்த நாட்களாகவே தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது... எனவே, கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது..

வலுவிழந்தது
ஆனால், அது வலுவிழக்க ஆரம்பித்தது.. தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதனால், கன மழை வாய்ப்பு படிப்படியாக குறைந்து விட்டது.. எனவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதி ஆகிய இடங்களில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் நேற்று முன்தினம் எச்சரிக்கை அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது.

பரவலான மழை
அந்த வகையில், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர்... இதனிடையே, இன்று முதல் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

இடி, மின்னல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென் மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் இன்று தரைக்காற்று வீசலாம் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால்,மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications