மழை..ங்க.. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர போகுதாம்.. தமிழ்நாட்டு மக்களை குளிர வைத்த ஜில் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும் நாளையும் 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வழக்கத்தை விட வெயில் அதிகமாக பதிவாகி வருகிறது... தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது.
வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகு, பெரிதாக மழை எங்கும் இல்லை.. எனினும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட நன்றாகவே பெய்ததால், பெரும்பாலான நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பிவிட்டன..

கலக்கம் - பீதி
கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றே நம்பப்பட்டு வந்தாலும், வறட்சியை நினைத்து லேசான கலக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வருவது பெருத்த ஆறுதலை தந்து வருகிறது.. அந்தவகையில், இன்று அதாவது மார்ச் 4ம் தேதி, நாளை மார்ச் 5ம் தேதி என 2 தினங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய தினம் சென்னை வானிலை மையம் அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தது.

காற்றின் திசை
அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் 4ம்தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்... ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.. நாளை 5ம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வார்னிங்
நாளை மறுநாள் 6ம் தேதியும், 7ம் தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு
முன்னதாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, புதுக்கோட்டை தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்து மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால், இதற்கான எதிர்பார்ப்புகளும் எகிறிவருகின்றன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications