கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
Recommended Video
சென்னை: கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆயிரம் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாக்களிக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்கள். இதன் காரணமாக தேர்தல் அன்று குமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதி மீனவ கிராமங்களில் போராட்டங்களும் நடந்தது.

இந்நிலையில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திடீரென சுமார் 45 ஆயிரம் வாக்காளர்கள் கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மீனவர் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
அந்த அமைப்பு தனது மனுவில், வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் அதிகம்பேர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. மேலும் வாக்ககாளர்கள் நீக்கம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி உள்ளது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் 4 வார காலத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஒத்தி வைத்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications