போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர
மதுரை: சிவகங்கை இளைஞர் ஆகாஷ் டெலிசன் காவல் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆகாஷ் டெலிசனின் உடலை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அரசு தரப்பே இறுதிச்சடங்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக முழுமையான நடவடிக்கை எடுக்கப்படாத வரை உடலை பெற்றுக்கொள்ள முடியாது என்று ஆகாஷின் பெற்றோர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், கொலை முயற்சி தொடர்பான ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பரபரப்பை அதிகரித்தது, அவர் நீதிமன்ற நடுவரிடம் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம்தான். அதில், காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும், தனது காலை உடைத்ததாகவும் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது.

ஆகாஷ் டெலிசன்
இதனால் இது சாதாரண மரணம் அல்ல, காவல் மரணம் என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது. ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகாஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அவர்கள், அதுவரை மகனின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தனர்.
காவல் மரணம்
இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆகாஷின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகனின் மரணத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றம்
மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, விசாரணை அதிகாரி விரைவாக விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி எச்சரிக்கை
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, "இறந்தவரின் உடலை இவ்வளவு காலம் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். எனவே, ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
ஆகாஷின் பெற்றோர்
மேலும், இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் நேரத்திற்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால், அரசு மற்றும் காவல்துறை இணைந்து நாளை (இன்று) உடலை அடக்கம் செய்ய தேவையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் நீதிமன்றத்தின் கருத்துக்குப் பிறகும், ஆகாஷின் பெற்றோர் தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தொடரும் போராட்டம்
வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய குடும்பத்தினர், "எங்கள் மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நீதி கிடைக்காமல் உடலை பெற்றுக்கொள்ள முடியாது. எங்களது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று அல்லது நாளை ஆகாஷின் உடல் போலீசார் மூலம் அடக்கம் செய்யப்படலாமென சொல்லப்படுகிறது.
-
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?














Click it and Unblock the Notifications