Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”நான் பணக்காரன் இல்லை” என கூறிய விஷால்.. திவாலானவர் என அறிவிக்க தயாரா?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லைகா தொடர்ந்த வழக்கில் திவாலானவர் என அறிவிக்க தயாரா என்று விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேசமயம், லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியை 30% வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்றும் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என்றும் நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Vishal high court Cinema

நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதால், பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குச் செலவு தொகையையும் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார் விஷால்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்றும் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என்றும் நடிகர் விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்படியென்றால் திவாலானவர் என அறிவிக்க தயாரா என்று விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், 30 சதவீதம் என்படி மிக அதிக வட்டி, இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக ரூ. 10 கோடி டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 கோடியை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+