சென்னை துரைபாக்கம் மென்பொருள் நிறுவன கட்டடத்தில் தீவிபத்து.. அலறி அடித்து வெளியேறிய ஊழியர்கள்
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த டைடல் பார்க் போன்ற கட்டடத்தில் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான கேன்டீன் வசதி கட்டடத்தின் மேல் மாடியில் இயங்கி வருகிறது. இந்த 9 மாடி கட்டடத்தின் கேன்டீனில்தான் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டனர். தீ அதிகமாக பரவி கரும்புகை எழுந்துள்ளது.

இதனால மேடவாக்கம், வேளச்சேரி , துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்துள்ளனர். உள்ளே யாரேனும் சிக்கியிருக்கிறார்கள் என தீயணைப்பு வீரர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த தீவிபத்தை அந்த வழியாக செல்வோர் வாகனங்களை நிறுத்தி பார்த்தபடி இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications