சென்னையில் கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிப்பு- மாலை முதல் மீண்டும் இயக்கம்!
சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மாலை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகமான கனமழை கொட்டியது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி வெளுத்தது. சென்னையில் இயல்பைவிட கூடுதல் மழை பதிவாகி உள்ளது.
இதனால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பயன்படுத்த திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்திடவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சார ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னையில் மின்சார ரயில் சேவைகளும் இன்று பாதிக்கப்பட்டன. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் முதலில் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்பட்டன. பல இடங்களில் நடுவழியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.

மின்சார ரயில்கள் ரத்து
பின்னர் காலை 10.30 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை செல்லும் வழித்தடத்திலும் மழைவெள்ள நீரில் தண்டவாளங்கள் மூழ்கின. இதையடுத்து எழும்பூர்- கடற்கரை இடையேயும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மின்சார ரயில் சேவைகள் அடியோடு ரத்து
அத்துடன் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் தாம்பரம்- எழும்பூர் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து மாலை முதல் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications