மிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை!
Recommended Video
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் பெய்த மழையால் 21 நாட்களுக்கு தண்ணீர் பஞ்சம் தீரும் மகிழ்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

வெப்பச்சலனம்
மத்திய மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் இந்த மழை பெய்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகளில்
முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, நொளம்பூர், அம்பத்தூர், திருவல்லிக்கேணி, அடையாறு, அயனாவரம், கூழ்பாக்கம், கோட்டூர்புரம், கோட்டூர், பெசன்ட் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இருட்டு
அதுபோல் ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, கே கே நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இருட்டான சூழல் நிலவுவதோடு இடி இடித்து வருகிறது.

மகிழ்ச்சி
இந்த மழை இன்னும் தொடரும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications