இந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
சென்னையில் அவர் கூறியதாவது: தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில், அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
கனமழையை பொருத்தளவில் தமிழகப் பகுதிகளில், திருவள்ளூரில் 22 செ.மீ, பூண்டி 21 செ.மீ, அரக்கோணத்தில் 17 சென்டிமீட்டர், தாமரைபாக்கத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம் முதல் தேனி வரை
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பல பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கனமழையை பொருத்தளவில், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

சென்னை மழை
சென்னையை பொருத்தளவில் இடைவெளி விட்டு சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கையை பொருத்தளவில், தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்துவரும் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மழை நிலவரம் தமிழக பகுதியில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும்.

மேக வெடிப்பு இல்லை
கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும்போது ஏற்படக்கூடிய மழைதான் இது. மேக வெடிப்பு என்பதெல்லாம் கிடையாது. இரவு நேரத்திற்கு மேல்தான் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இன்னும் தென்மேற்கு பருவ மழையே முடிவடையவில்லை எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக பிறகுதான் தெரியும்.

நல்ல மழை
தென்மேற்கு பருவமழை பருவ காலத்தில் தமிழகத்தில் 32 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 29% அதிகம். எனவே இந்த வருடம் தென் மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications