"லஞ்ச் டைமில்" அப்படியே சூழ்ந்த கருமேகங்கள்.. சென்னையில் குபீரென கொட்டிய மழை! டமால் டுமீல் இடியுடன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பயங்கர இடி சப்தத்துடன் இந்த மழை பெய்து வருகிறது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முதல் வரும் 28ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Heavy rain lashes in Chennai and its other parts

அதன்படி மன்னார்குடி, செங்கம், திருச்செங்கோடு, ஸ்ரீமுஷ்ணம், முகையூர், போளூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவிடைமருதூர், கொடவாசல், திருவண்ணாமை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது.

சென்னையிலும் கடந்த 22 ஆம் தேதி பெசன்ட் நகர், முகப்பேர், கிண்டி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று சென்னையன் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையின் முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, திருமங்கலம், கோயம்பேடு, கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

அது போல் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+