Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடையை ரெடியா வச்சுக்கோங்க.. அடுத்த 2 மணி நேரம் மழை விட்டு விளாச போகுது.. 6 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத் தக்கது.

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெயில் அடித்து வந்தாலும், நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

Heavy Rain Likely in Next Two Hours Thunderstorm Alert Issued for Six Tamil Nadu Districts

6 மாவட்டங்களில் மழை பெய்யும்

நேற்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் மட்டும் 8 செமீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்று காலையில் தென் மாவட்டங்களில் வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் மதிய நேரத்திற்கு பிறகு ஒரு சில இடங்களில் கரு மேகங்கள் திரண்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, கோவை, நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மழை பெய்யும் இடங்கள்

நாளை வெள்ளிக்கிழமை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

28-02-2026 மற்றும் 01-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 02-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வரும் 3 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 4 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். என்று தெரிவித்து இருந்தது.,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+