10 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
நாளை 20-ந் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications