Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. சென்னை பெருங்களத்தூரில் 3 கி.மீ தொலைவுக்கு வரிசை கட்டி நின்ற வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி பழுது, பாலத்தின் கீழ் மினி வேன் பழுது காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசலில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் தீராத பிரச்சனையாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகளை அரசு ஏற்படுத்தினாலும், இன்னும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

Heavy Traffic Jam at Perungalathur Flyover as Truck and Van Repairs Cause Hour-Long Snarl

சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில், இன்று பெருங்களத்தூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் பாலத்தின் மீது வந்த வாகனங்கள் நகர முடியவில்லை. அதேபோல, பாலத்தின் கீழ் மினி வேன் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசலில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். நெரிசல் காரணமாக 3 கி.மீ தொலைவிற்கு ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+