சென்னை புறநகர் பகுதிகள் எப்படியிருக்கு?.. முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. இந்தாங்க ஒரு சாம்பிள் வீடியோ
சென்னை: சென்னை புறநகர் பகுதிகள் பெரும்பாலானவை வெள்ளத்தில் மிதக்கின்றன. முட்டி அளவு தண்ணீரால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
Recommended Video
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
இன்று மாலை கரையை கடக்கத் தொடங்கும் நேரத்தில் காற்று பலமாக வீசும் என கூறப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

புறநகரில் மழை
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் மிதக்கின்றன. அப்படி தண்ணீர் தேங்கிய இடம்தான் ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டைக்கு அருகே உள்ளது. இந்த இடத்தில் கனமழையால் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேடு
பள்ளம் எது மேடு எது என தெரியாத அளவுக்கு இருப்பதால் பெரும் வெள்ளமாக இருக்கிறது. இப்பவே இப்படியென்றால் இன்று மாலை புயல் கரையை கடக்கும் போது புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும், இதனால் தண்ணீரின் அளவு இன்னும் உயரும் என தெரிகிறது.

30 ஏரிகள்
மேலும் செம்பரம்பாக்கம் ஏரி, புறநகரில் உள்ள 30 ஏரிகள் திறந்துவிடப்பட்டதால் இது போன்று தண்ணீர் தேங்கியுள்ளதாக ஏரியா மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. புறநகர் பகுதிகள் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாம்பிள்தான்.

கனமழை
முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிப்பதால் மக்கள் பாதுகாப்பு இடங்களை நோக்கி செல்கிறார்கள். நாளை வரை கனமழை பெய்யும் என்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் மலைப்பகுதிகள் இருப்பதாலும் அங்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications