Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை திருமணத்தை தடுக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழு.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிதம்பரம், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் குழுவினர், குழந்தை திருமணங்கள் நடத்துவதை தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது.

High Court asks explanation from TN government to form committe to prevent child marriage in Chidambaram Nataraja temple

1929ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சட்டங்களை பொருட்படுத்தாமல் சிதம்பரம் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கின்றனர்.

இந்த குழந்தை திருமணங்களை தடுக்க இந்து சமய அறநிலஇயத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண்நடராஜன் ஆஜராகி வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு கோயில் விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

குழந்தை திருமணம் குறித்து ஏற்கனவே பெறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் கூறினார். இதனையடுத்து, மனு குறித்து தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, பொது தீட்சிதர்களை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரர் தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+