4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள பணிகளுக்கு எதிராக உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 13 ஆம் தேதி நடைபெற்ற தவெக அரசின் மீதான பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

AIADMK high court by election tvk

இந்நிலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தனர்.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்.

நான்கு எம்.எல்.ஏ.க்கள், தவெகவில் இணைவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராஜினாமா செய்ததும், தவெகவில் இணைந்துள்ளதால், இது திடீரென எடுத்த முடிவல்ல. இது அரசியல் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால், ராஜினாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், அந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 21 பேரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கடிதம் அளித்ததால், அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த நான்கு பேரும் தாமாக முன் வந்து பதவி விலகியுள்ளனர்.

இருப்பினும், தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டமன்ற விதிப்படி, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலுக்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், குறிப்பிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரிய இடைக்கால கோரிக்கையை மறுத்துவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு பதவியை ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்களும், சட்டப்பேரவைத் தலைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்பது போன்ற எந்தவித இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. அதோடு, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+