Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்றத்திற்கு மாரிதாஸ் வந்ததும்.. போலீஸ் வாகனத்தின் மீது பூக்கள் தூவி இந்து மக்கள் கட்சி ஆரவாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூபர் மாரிதாஸை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது அவர் வந்த போலீஸ் வாகனத்தின மீது இந்து முன்னணியினர் பூக்களை தூவியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

மதுரை சூர்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ் (43). இவர் சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதாக தெரிகிறது. இவர் தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் குன்னூருக்கு சென்ற இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ, விமான படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சர்ச்சைக்குரிய கருத்துகள்

சர்ச்சைக்குரிய கருத்துகள்

இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மாரிதாஸ் வெளியிட்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரை போலீஸார் கடந்த 9ஆம் தேதி அவரை கைது செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாரிதாஸ் கைது

மாரிதாஸ் கைது

இந்த நிலையில் போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக 2020-இல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இவர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

தமிழக ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ரவி

அவரது கைதை பாஜகவினர் கண்டித்தனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது மாரிதாஸ் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து புகார் கூறியதாக தெரிகிறது.

Recommended Video

    யூடியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து.. மதுரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
    பூக்களை தூவிய இந்து மக்கள் கட்சி

    பூக்களை தூவிய இந்து மக்கள் கட்சி

    இந்த நிலையில் போலி இமெயில் மூலம் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவரது வருகையை அறிந்து நீதிமன்ற வாயிலில் இந்து முன்னணி அமைப்பினர் குழுமியிருந்தனர். அவரை பார்த்ததும் பாரத் மாதா கி ஜே என முழங்கினர். அப்போது அவர் வந்த போலீஸ் வாகனத்திற்கு பூக்களையும் தூவியதால் பரபரப்பு எழுந்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+