குரூப் 2 தேர்வு.. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.14) குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. எனவே, அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. 7.93 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024-25ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை (14.09.2024) சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications